தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்ய புதிய அறிவிப்பு வந்துவிட்டது. அதாவது Engineer Trainee என்ற பதிவியை நிரப்ப NIT முடிவு செய்துள்ளது. BE/B.Tech, M.Sc, MCA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனவே தகுதி உள்ள நபர்கள் மிக சுலபமாக ஆன்லைன் வழியாகவே அப்ளை செய்யலாம்.
Engineer Trainee பணிக்கென மொத்தமாக ஏழு காலி பணியிடங்கள் உள்ளது. இத்தகைய பணிக்கு எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் ஏழு பணியாளர்களை தேர்வு செய்து பின்னர் அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.37 ஆயிரம் கொடுக்கப்படும். மேலும், நம்ம தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்திலே வேலை பார்க்க வாய்ப்பு வழங்கப்படும்.
Also Read >> ஈஸியா இமெயிலில் அப்ளை பண்ணுங்க… பாரதியார் பல்கலைக்கழக வேலையில் ஜாயின் பண்ணிடுங்க…!
இப்பணியில் ஜாயின் பண்ண வேண்டும் என்றால் தங்களின் வயது வரம்பு 40 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். இந்த வயதை உடையவர்களே அப்ளை செய்ய தகுதியுடையவர்கள். எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரைக்குள் ஆன்லைனில் அப்ளை பண்ணிடவும்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை அறிய NIT Trichy Notification என்ற லிங்கை கிளிக் பண்ணவும். விண்ணப்பிக்க Apply Online என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.