நம்முடைய அன்றாடம் வாழ்கையில் அரசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ணெய் அத்தியாவசியமான பொருளாக காணப்படுகிறது. இந்த பொருளை ரேஷன் அட்டை மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் வாங்குகிறோம். இத்தகைய பொருட்களை தமிழக அரசே விநியோகம் செய்கிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். மேலும், நியாயவிலை கடைகள் சரியாக இயங்கி வருகிறதா என அரசு அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆய்வை மேற்கொள்கிறது.
இந்நிலையில், கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை என்ற ஒரு புதிய முயற்சியை தொடக்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக ரொம்ப பழமையான கட்டிடங்கள் அனைத்தும் வண்ணம் பூசி மற்றும் சீரமைப்பு பணிகளை தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கழிப்பறை வசதி, மாற்று திறனாளிகளுக்கென சாய்வுதள வசதி, முதியோகளுக்கு உட்காருவதற்கு ஓய்விருக்கை முதலியவற்றை அமைத்து வருகிறது.
முதல் கட்டமாக 75 ரேஷன் கடைகள் வண்ணம் பூசி சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினால் இதுவரை மொத்தம் 2,975 ரேஷன் கடைகள் புதுபொலிவாக மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் ரேஷன் கடைகளுக்கும் ஐஎஸ்ஒ தரசான்றுகள் கிடைத்து வருகிறது. இதுவரை மொத்தம் 5,784 கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!