முன்னதாக நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீட் என்ற நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த நீட் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் மருத்தவ சேர்க்கைக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்நிலையில், இந்த நீட் தேர்வுக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார். அப்பொழுது, ஒரு மாணவரின் பெற்றோர் எங்கள் பிள்ளைகள் நீட் தேர்வு எழுத அதற்கென்று தனியாக பணம் செலுத்தி படிக்க வேண்டியுள்ளது. இந்த சூழலை தவிர்க்க நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்திட உள்ளீர்கள் என கேட்டார்.
அப்பொழுது, இந்த கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று தெரிவித்தார். இந்த நீட் தேர்வின் மூலமாகத்தான் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்க முடிகிறது என்று கூறினார்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- Diploma படித்திருந்தால் போதும்! சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!
- மாதத்திற்கு ரூ.35,400 முதல் ரூ.1,77,500 சம்பளம் வழங்கப்படும்! NITTTR சென்னை நிறுவனத்தில் வேலை!
- 323 காலியிடங்களுக்கு 10th, ITI, Diploma, BE, B.Tech படித்த அனைவரும் அப்ளை பண்ணலாம்! ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலைகள்!
- BE, B.Tech, M.Sc, MBA படித்தோருக்கு தமிழ்நாடு அரசு வேலை ரெடியா இருக்கு..! நல்ல சம்பளத்தில் வேலை!
- ஆஹா..! சேலத்துல தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பா? உடனே அப்ளை பண்ணிடலாம் வாங்க..!