அடுத்த மாதமும் மழையா? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
56

வருடந்தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் பருவமழை தொடக்கம் கடந்த அக்டோபர் மாதம் முதலே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலே தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

குறிப்பாக சென்னை, மயிலாடுதுறை போன்ற இடங்களில் கனமழை பெய்ததால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசையில் ஏற்படும் காற்றின் மாறுபாடு காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதிவரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றின் மாறுபாட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணாப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குமரிக் கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் கடலோரப் பகுதிகளில் காற்று 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here