இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், 10 நாட்களுக்கு பின் நல்லடக்கம்
இங்கிலாந்து மகாராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 96 வயதாகிறது. இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்த, இவருக்கு இதன் முன்னரே உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவக்குழு இவரை ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கண்காணித்து வந்தது.
நேற்று திடீரென மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர், மாகாராணிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலகுறைவால் நேற்று உயிர் துறந்தார். மகாராணியின் உயிர் இழப்பை அடுத்து, இளவரசர் 3-ம் சார்லஸ் இங்கிலாந்தினுடைய புதிய மன்னராக அரியணையில் ஏறி உள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராணி எலிசபெத்தின் உடலானது, 5 நாட்கள் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது எனவும், 10 நாட்களுக்குப்பின் மகாராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.