நமது உடலில் இரத்த சிவப்பணு குறைவாக இருந்தால் (ஹீமோகுளோபின் குறைவதால்) காலையில் தலைவலி ஏற்படும். எழுந்தவுடன் அடிக்கடி தலைவலி ஏற்படுமானால், நீங்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
நமது உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தாலும் தலைவலி ஏற்படும். சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து, அதனை சரி செய்வதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகள் மூலமும் தலைவலியை கட்டுப்படுத்தலாம்.
தண்ணீரின் அளவு நமது உடலில் குறைவாக இருந்தாலும் தலைவலி வரக்கூடும். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவராக இருந்தால், முதலில் அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.