விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகளுள் ஒன்று தான் தெரளி கொழுக்கட்டை. இதை விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு படைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
- சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன்
- வெல்லம் – 2 கப்
- அரிசி மாவு – 2 கப்
- தேவைக்கேற்ப தண்ணீர்
- தேங்காய்(துருவியது) – 1 கப்
செய்முறை:
STEP 1
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஓரளவு கெட்டியான பிறகு, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி ஆற வைத்து வடிகட்டிய பின், மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
STEP 2
அதில் ஏலக்காய் பொடி, தேங்காய், சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறிய பின், சிறிது சிறிதாக அரிசி மாவை அதில் சேர்த்து நன்கு கிளறிவிட்டு சற்று கெட்டியானதும், இறக்கி ஆற விடவும். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக அந்த மாவை தெரளி இலையில் வைத்து சுருட்டி வைக்கவும். இதனை, தேவைக்கேற்ப செய்து கொள்ளவும்.
STEP 3
இறுதியாக இட்லி பாத்திரத்தில் இட்லியை வேக வைப்பது போல, முதலில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், அதன் மேல் இட்லி தட்டை வைத்து அதில் மடித்து வைத்துள்ள தெரளி இலையை ஒவ்வொன்றாக வைத்து மூடி, 20 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான தெரளி கொழுக்கட்டை தயார்!