காலாண்டு தேர்வுக்கான விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்ததுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே தேர்வு நடத்த உத்தரவு!

0
73

பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலும் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை தேதியை வெளியிட்டுள்ளது.

1-ஆம் வகுப்பு முதல் முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக கூடுதல் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கல்வித்துரையானது, பள்ளி அளவில் வினாத்தாள்களை தயாரித்து இந்தாண்டு தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே தேர்வுக்கான தேதிகளை முடிவு செய்வதுடன் தேர்வினை நடத்தி முடிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here