மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையினை இளம் சாதனையாளர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள சுமார் 3093 மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வித் தொகை திட்டத்தின் கீழ் 1.25 லட்சம் வரையிலான உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையானது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், சீர்மரபின பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணையதளத்தில்உள்ள பட்டியலில் உள்ள பள்ளிகளில் படித்தவர்களாக இருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களில் ர் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அதிகபட்சமாக ரூபாய் 75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அதிகபட்சமாக ரூபாய் 1.25 லட்சம் வரையிலும் உதவித்தொகை பெறலாம் என்று அறிவிக்கபட்டுள்ளது. மேலும், இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://yet.nta.ac.in என்கிற இணையதள பக்கத்தில் சென்று ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!