நேற்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஊரக வளாச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வவாளர் பணிக்கென எழுத்து தேர்வு காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இந்த தேர்வானது நேற்று காலையில் ஒரு தேர்வும் பிற்பகலில் ஒரு தேர்வு நடைபெறும் எனும் நிலையில், தேர்வு எழுத போகும் தேர்வர்களுக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது.
சாலை ஆய்வவாளர் பதவிக்கான ஒரு தேர்வு காலையில் முடிந்த பின், இரண்டாவது ஒரு தேர்வு மதியம் 2 மணிக்கு நடக்க இருந்தது. TNPSCயின் விதிமுறைகளில் முக்கியமானது என்னவென்றால், தேவுக்கு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னாடியே வர வேண்டும்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு நடக்கவேண்டிய தேர்வுக்கு 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டது. இதனால் தாமதமாக வந்த 50 க்கும் மேற்ப்பட்ட தேர்வர்கள் தங்களை உள்ளே விடுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடந்து சிறிது நேரத்திலே சாலை மறியலில் ஈடுபட்டுவிட்டனர்.
தேர்வர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவுவாயின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே போய் தங்கது தேர்வை எழுத தொடங்கினர். குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் தேர்வர்களை தடுக்க முடியாத நிலை ஏற்ப்பட்டு விட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர் உடனடியாக தேர்வு நடைபெறும் மையத்திற்கே வந்தார். போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அவர்களது தலைமையில் குவிக்கப்பட்டு நுழைவு வாயின் கேட்டை உடைத்து உள்ளே சென்று தேர்வு எழுதியவர்களிடம் விசாரைனையை மேற்கொண்டார்.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!