ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகத்தின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். இந்நிலையில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறனர்.
அந்த வகையில், மாதந்தோறும் திருப்பதி எழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட் பெறுபவர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். அதிலும், ஆன்லைன் தரிசனம் டிக்கெட் ரூ.300 கொடுத்து வாங்குபவர்கள் சுமார் 5 மணி நேரத்திலேயே தரிசனம் செய்து வருகினறனர்.
இந்நிலையில், பக்தர்களின் இத்தகைய சிரமத்தை போக்க இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் லாக் டோக்கன் வழங்கி வருகின்றனர். தற்பொழுது பனிபொழிவு காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர். டோக்கன் வாங்காமல் நேரடியாக செல்லும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023