புஷ்பா படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தில் நடிக்குமாறு சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகியுள்ளனர். இவருக்கு பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக வருகின்றன.
ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த கார்கி படம் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால், அதிகப்படியான பாராட்டுகள் இவரது நடிப்பிற்கு கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு பழங்குடி இன பெண் வேடத்தில் நடிக்க படக்குழுவினர் சாய் பல்லவியை அணுகி உள்ளனர். இதுவரை சாய் பல்லவி நடித்த படங்களில் அவருக்கான கதாபாத்திரம் சற்று அழுத்தமானதாக இருந்து உள்ளதால், இந்த படத்தில் பழங்குடி இன பெண்ணாக நடிப்பதற்கு அவரிடம் பேசி வருகின்றனர்.
புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாப்பாத்திரத்தில் பகத்பாசிலும் நடிக்கிறார்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தை போன்றே இரண்டாவது பாகமும் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. தற்போது படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.