இத்தனை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : மாண்டஸ் புயல் எதிரொலி

0
81

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த புயலானது தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே, மாமல்லபுரம் அருகே நாளை(சனிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. மேலும், வடதமிலக பகுதியான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய கூடும் என்பதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் இந்த மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here