வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
மேலும், இந்ததாழ்வு பகுதியானது இனி வரும் நாட்களில் தாழ்வு மண்டலமாகி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும் என்பதாலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர்,காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அந்தமான் மற்றும் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
RECENT POSTS
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023