Today Sports News 2023

இலங்கை அணி நேற்று நடைபெற்ற, ஆசிய கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர்களான நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் காயம் காரணத்தினால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இதனால் பாகிஸ்தான் அணி, இளம் வீரர்களை கொண்ட பந்து வீச்சு கூட்டணியை கொண்டு ஆட்டத்தில் களம் இறங்கியது. அனுபவ வீரர்கள் இல்லாமல் ஆட்டத்தில் களமிறங்கியதே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இரு சீனியார் வேகப்பந்து வீச்சாளர்களும் காயம் அடைந்துள்ளதால், தற்போது ஆசிய கோப்பை தொடரின் ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளனர். இந்நிலையில் நசீம் ஷா வேகப்பந்து வீச்சாளர், ஆசிய கோப்பை தொடரில் இருந்தே விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு மிக பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் ஆசம், ஹாரிஸ் மற்றும் நசீம் ஷா காயம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில், எங்கள் திட்டத்தை வெளிப்படுத்த விருப்பமில்லை எனவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, சீனியர் வீரர்கள் இருவரில் ஹாரிஸ் ரவூப் உலகக்கோப்பைக்கு முன்னதாகவே குணமடைந்துவிடுவார் என கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆசிய உலகக்கோப்பை தொடரின் சில போட்டிகளை தவற விடுவார்கள் என கூறினார். ஆனால், ஆசிய உலககோப்பை போட்டியின் பிற்பகுதியில் கண்டிப்பாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இருப்பார் என்றும் கேப்டன் பாபர் தெரிவித்தார்.