சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே 100 ரூபாய்க்கும் அதிகமாக தான் விற்கப்படுகிறது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி வரையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110-க்கும் மேல் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.
இந்நிலையில், மே 22 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ஆட்டீஊஆ அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 9 ரூபாய் குரக்கபப்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிலிருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102. 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
இதையடுத்து, 199-வது நாளான நேற்று நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.
200 -வது நாளான இன்று (புதன்கிழமை) பெட்ரோல் விலை ரூ.102.63 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24 காசுகளுக்கும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023