தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல், தமிழக அரசு ஊழியர்களின் நலனுக்காவும் அவர்களின் குழந்தைகள் நலனுக்காவும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில வட்டி இல்லா முன் பணம் திட்டத்தின் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் தற்பொழுது புதிய மாற்றம் செய்து தமிழக அரசு தற்பொழுது அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகள் பொறியியல், தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில இனி கூடுதல் முன்பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, தொழில்முறை கல்வி பயிலும் மாணவர்களுக்கான வட்டி இல்லா முன் பணம் திட்டத்தின் மூலம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான முன்பண வரம்பானது ரூ.20 ஆயிரமாக இருந்த நிலையில் தற்பொழுது ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- தனியார் வேலையில் விருப்பமுள்ளவரா நீங்க? இந்த வாய்ப்பு உங்களுக்காகவே! சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க ப்ரண்ட்ஸ்..!
- உடனே அப்ளை பண்ணுங்க! அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை தராங்களாம்! Diploma, Any Degree படிச்ச எல்லாருமே அப்ளை பண்ணலாம்!
- ரூ.23,500 சம்பளத்துல மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு..! அப்ளை பண்ண நீங்க ரெடியா இருக்கீங்களா?
- ஆரம்ப சம்பளமே 44 ஆயிரம் ரூபா! அட்டகாசமான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது BECIL நிறுவனம்!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! VOC துறைமுக அறக்கட்டளையில் வேலை!