தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டணமும் உயர்த்தபடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தற்பொழுது, போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அந்த நஷ்டத்திலிருந்து துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்தமாட்டார் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். மேலும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடைமுறை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். பேருந்து கட்டணம் எந்த ஒரு சுழலிலும் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023