தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்தப் பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வைத்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று இரவு 11 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கும் மாண்டஸ் புயல், அதிகாலை 3 மணிக்குள் கரையைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபொழுது மக்களின் பாதுகாப்பிற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மானிட்டரிங் ஆபிசர் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கவனித்து, என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே எவ்வளவு மழை வந்தாலும் எவ்வளவு காற்றடித்தாலும் அதை சமாளிப்பதற்கும், அதிலிருந்து மக்களை காப்பதற்கும் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பொது மக்கள் அரசு மூலமாக எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023