மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு..! மதகுகள் திறக்கப்படுமா?

0
44

இந்த ஆண்டு தொடக்கம் முதலிலேயே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நல்ல முறையில் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், கடந்த ஒரு வார காலமாக குறைந்திருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது வடகிழக்கு பருவமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்துநேற்று காலை 10 ஆயிரத்து 600 கன அடியாக இந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக ஜூலை மாதம் மேட்டூர் ஆணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது முறையாக தற்பொழுது மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பபதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here