உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிக சம்பளம் தரும் நிறுவனத்தை தேடி செல்கின்றனர். ஆனால், அதிக சம்பளம் மற்றும் வருமானத்தை ஈட்டுபவர்களுக்கும் ஒரு ரூல்ஸ் உள்ளது. அதுதான் வருமான வரி கணக்கு. அதாவது ஒரு ஆண்டிற்குள் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் அல்லது வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி கணக்கை செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.
அந்த வகையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரியை தாக்கல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆறரை கோடி பேர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 36 லட்சத்து 91 ஆயிரம் பேர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LATEST POSTS IN VALAIYITHAL.COM
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!
- வங்கியில் வேலை செய்ய ஆசையா? YES வங்கியில் வேலை அறிவிப்பு! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!
- ஒரு வருகைக்கு ரூ.1,000/- சம்பளம் தராங்கலாம்! பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை ரெடி!
- 10th, ITI, Diploma, Degree படித்த ஆர்வமும், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கப்பல் கட்டும் தள வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! 34 காலியிடங்கள்!
- தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் இருபது காலியிடங்கள் அறிவிப்பு! இந்த அரசு வேலைய மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!