கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்ந்து, மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 24 ரூபாயும், சவரனுக்கு 192 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,023ஆகவும், சவரன், ரூ.40,184ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து ரூ.5,047 ஆகவும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 376ஆக ஏற்றம் கண்டது.
அதேபோல், வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று நிலவரப்படி, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.20 பைசா அதிகரித்து, ரூ.72.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.72,500 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே கடும் உச்சத்தில் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பத்தினருக்கும், தங்கம் வாங்க நினைப்போருக்கும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023