கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலையா? மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்

0
54

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விவாதங்களின்போது, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாட்டில் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார்.

இதன்படி, 2017-ம் ஆண்டில் 5,955 விவசாயிகளும், 2018-ம் ஆண்டில் 5,763 பேரும், 2019-ம் ஆண்டில் 5,957 பேரும், 2020-ம் ஆண்டில் 5,579 பேரும், 2021-ம் ஆண்டில் 5,318 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் மராட்டியம் மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த பட்ஜெட் கூட்டு தொடரில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here