தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்டம் – தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0
36

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தென்காசிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ரயிலில் நேற்று பயணித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு விமானம் மூலம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முதன்முறையாக தென்காசிக்கு ரயிலில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார்.

இந்நிலையில், மதுரையில் இன்று மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பெருங்குடியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கான மேம்மாட்டு திட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here