இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் என்றால் ஒரு தனிவித ஆர்வம் உள்ளது. அதிலும் இந்திய அணி விளையாடும் விளையாட்டை இளைஞர்கள் டிவியில் பார்த்து ஆர்வத்துடன் கூச்சலிட்டு கத்தும்பொழுது ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த விளையாட்டை பார்க்க தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த காலத்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டாய் கிரிக்கெட் உள்ளது.
இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் என்று தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு மற்ற வீரர்களை காட்டிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இவரை”தல தோனி” என்று ரசிகர்கள் ஆசையாக அழைப்பார்கள். தோனிக்கு அடுத்தப்படியாக கேப்டனாக பும்ரா இருந்து வருகிறார்.

இதையடுத்து, காயம் காரணமாக நீண்ட நாட்களாக நட்சத்திர வீரர் பும்ரா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று துவங்கும் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் பும்ரா. மேலும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் கான்டினென்டல் போட்டியிலும் ஆசியக் கோப்பைக்கான அணியில் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- உடனே அப்ளை பண்ணுங்க! அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை தராங்களாம்! Diploma, Any Degree படிச்ச எல்லாருமே அப்ளை பண்ணலாம்!
- ரூ.23,500 சம்பளத்துல மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு..! அப்ளை பண்ண நீங்க ரெடியா இருக்கீங்களா?
- ஆரம்ப சம்பளமே 44 ஆயிரம் ரூபா! அட்டகாசமான வேலை வாய்ப்பை வெளியிட்டுள்ளது BECIL நிறுவனம்!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் 1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்! VOC துறைமுக அறக்கட்டளையில் வேலை!
- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!