தவறுதலாக ரூ.11,677 கோடி குஜராத்தை சேர்த்த ஒருவரது கணக்கில் வரவு செய்யப்பட்டு, அன்று இரவே மீண்டும் அந்த பணம் திரும்ப எடுக்கப்பட்டது. தனது கணக்கில் அவ்வளவு தொகையை பார்த்த அந்த நபர், உடனே பங்குசந்தையில் அதில் ரூ.2 கோடியை முதலீடு செய்து, ரூ.5 லட்சத்தை லாபம் பார்த்துள்ளார்! ரமேஷ் சாகர் என்பவர் குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தை சேர்ந்தவர்.
இவர், கடந்த 6 ஆண்டுகளாக பங்கு வர்த்தக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். ரூ.11 ஆயிரத்து 677 கோடி அவரது டிமேட் கணக்கில், கடந்த ஜூலை 26ம் தேதி வரவு செய்யப்பட்டுள்ளது. தனது கணக்கில் இவ்வளவு பெரிய தொகையை கண்டப்பின்னும், சிறிதும் பதற்றமடையாத ரமேஷ் சாகர், உடனடியாக அதிலிருந்து ரூ.2 கோடியை முதலீடாக பங்கு சந்தையில் போட்டுடிருக்கிறார்.
அன்றே ரூ.5 லட்சம் லாபத்தை அவர் பெற்றுள்ளார். அன்றைய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக பணம் வரவு செய்யப்பட்ட தகவலை தெரிவித்த வங்கி, அந்த பணத்தை அன்றைய இரவே திரும்ப பெற்றுக்கொண்டது. ரமேஷ் சாகர் அந்த இடைப்பட்ட 8 மணி நேரத்திற்குள் தனது அறிவாற்றலால், ரூ.5 லட்சத்தை இலாபமாக சம்பாதித்து உள்ளார்.
இதே போல, சமீபத்திலும் ரூ.50 பில்லியன் டாலர் தவறுதலாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவரது வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டு, பிறகு மீண்டும் திரும்ப பெறப்பட்டது. ஆனால், அந்த இடைப்பட்ட நேரத்தில் 25வது இடத்தை அந்த நபர், உலக பில்லியனர் பட்டியலில் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.