கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. பின்னர் அது தீவிர புயலாகவும் மாறியது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.
இந்த மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த மாண்டஸ் புயலால் மிகப் பெரும் சேதங்கள் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேளம், இந்த புயலால் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் உள் மாவட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களீல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி( நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் 3 மணி முதல் நாளை வரை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட நிவாகம் உத்தரவிட்டுள்ளது.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023