தொடரும் கனமழை..! இத்தனை மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

0
51

கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. பின்னர் அது தீவிர புயலாகவும் மாறியது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.

இந்த மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது. இந்த மாண்டஸ் புயலால் மிகப் பெரும் சேதங்கள் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேளம், இந்த புயலால் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் உள் மாவட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களீல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி( நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் 3 மணி முதல் நாளை வரை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட நிவாகம் உத்தரவிட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here