ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 என்ற விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் மெல்ல மெல்ல அதன் சுற்றுவட்ட பாதையை சுற்ற தொடங்கியது. சந்திராயன் 3 விண்கலம் ஒவ்வொரு சுற்றுப் பாதையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலம் தற்பொழுது எந்த சுற்றுவட்ட பாதையில் உள்ளது என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்திராயன் 3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்து உள்ளது. சந்திராயன் விண்கலமானது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டுள்ளது. இதனை அடுத்து சந்திராயன் 3 ஆகஸ்ட் 5 ஆம் தேதி சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன் 3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- மத்திய அரசு சூப்பரான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது! மாதம் ரூ.1,00,000/- சம்பளம்!
- BECIL லிமிடெட்டில் புதியதோர் பணியிடங்கள் அறிவிப்பு! தாமதிகாமல் உடனே அப்ளை பண்ணுங்க!
- Diploma படித்திருந்தால் போதும் CMC வேலூர் கல்லூரியில் வேலை செய்யலாம்!
- UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் புதிய வேலை அறிவித்துள்ளது! விண்ணபிக்க மறக்காதீங்க!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.85,000 வரை சம்பளம் தராங்க! ESIC கழகத்தில் வேலை!