மத்திய அரசின் புதிய அறிவிப்பு..! லேப்டாப், டேப்லட் இறக்குமதிக்கு தடையில்லை!

மத்திய வர்த்தக அமைச்சகமானது கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் ஆகியவற்றிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் எச்எஸ்என் 8741 கீழ் வரும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதிகளுக்கான சரியான உரிமத்தை பெற்றுக்கொண்டால் அவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறிப்பிட்ட வகை லேப்டாப், கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடை, நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு அக்டோம்பர் 31 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM