படமாக எடுக்கப்படும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு | நடிக்கப்போவது யார் தெரியுமா?

0
18
Entertainment News

கடந்த 2019ஆம் ஆண்டில் மறைந்த ஆந்திராவின் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி வாழ்க்கையை ராகவா இயக்கத்தில் ‘யாத்ரா’ என்னும் பெயரில் திரைப்படத்தை வெளியிட்டது. இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி வேடத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து ‘யாத்ரா -2’ பாகத்தை தயாரிக்கவுள்ளனர்.

யாத்ரா -2 பாகம் படத்தில் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளனர். அவரது இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து தற்போது ஆந்திர முதல் மந்திரியாகி இருப்பதுவரை நடந்த உண்மை சம்பவங்கள் அனைத்தும் இடம்பெறும் என கூறியுள்ளனர்.

இப்படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் சூர்யா நடிக்கப்போவதாக பெயர் அடிப்பட்டது. ஆனால் தன்னிடம் வந்து யாரும் அணுகவில்லை என பதிலளித்தார். மேலும் இப்படத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் தற்போது ஜீவாவை தான் தேர்வு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தது.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here