மக்களே அலர்ட்…! உருவானது மாண்டஸ் புயல்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை..!

0
39

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. கடந்த மாதத்தில் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்தநிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுபெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு இந்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு’மாண்டஸ் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புயலானது காரைக்கால் பகுதிகளில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும் சென்னையில் இருந்து 640 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘மாண்டஸ் புயல்’ புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here