நாடு முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பசு மாட்டின் பாலை உட்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் எருமை மாட்டு பால் மற்றும் ஆட்டு பாலையும் உட்கொண்டு வருகின்றனர். ஆனால், இதில் இருக்கும் சத்துக்களை விட கழுதை பாலில் இருக்கும் சத்துக்கள் தான் அதிகம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். கழுதை பால் அந்த அளவிற்கு கிடைக்காததால் அந்த பாலின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில், கழுதை பாலில் உடல் பருமன், புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நன்மைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த பாலுக்கு வந்த மவுசு மேலும் கூடியுள்ளது. இதனால் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை ரூ.8000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கழுதை பால் விற்பனை அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கழுதை பால் வியாபாரிகள் கூறுகையில், ஒரு கப் கழுதை பால் அதாவது 25 மிலி ரூ. 200 வரை விற்பனை செய்து வருவதாகவும் இந்த பாலின் மதிப்பு தற்பொழுது தான் உலகம் அறிந்து வருதாகவும் தெரிவித்தார். மேலும், கழுதை ஒன்று ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பாலை மட்டுமே கரக்கும் என்பதால் இந்த பாலின் விலை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!