தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டரின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டரின் விலை ஏற்றத்தால் பாமர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஒரு சில சிறப்பு திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு பழைய எண்ணை வயல்களில் இருந்து வெளிவரும் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயிக்க அதனை மறு ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து இது குறித்து திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்த்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி இரண்டின் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு பற்றி ஏஎனை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள கருத்தில், மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் இறுதி வடிவத்தினை திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ். பரேக் தலைமையிலான குழு இதனை பின்பற்றி வருவதாகவும் இந்த குழு விரைவில் தனது அறிக்கையை அரசிடம் சமர்பிக்கும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.
மேலும், இந்த குழு நிர்ணயிக்கும் விலையில் 2 வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என்றும் அவற்றில், ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் பழைய எண்ணெய் வயல்களில் இருந்து வெளிவரும் எரிவாயு விலைக்கான விலை வரம்புக்கும், பிற எண்ணெய் வயல்களில் இருந்து வரும் எரிவாயுகளுக்கான விலை நிர்ணயிப்பது மாறுபடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
RECENT POSTS
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023