அனைத்து கட்சி கூட்டத்திற்கு 40 அரசியல் கட்சிகள் அழைப்பு..! ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்குமா?

0
51

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியாவில் செயலகம் அமைக்கவும் ஒட்டுமொத்த கொள்கை முடிவுகளை செயலாக்கும் அமைப்புகளை ஏற்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி-20 அமைப்பு என்பது, இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பு என வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது.

இந்த ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்து கடந்த 16-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொறுப்பை இந்தியா அதிகார்வபூர்வமாக வரும் 1 ஆம் தேதி ஏற்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக ஜனாதிபதி மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் வருகின்ற 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்பது குறித்தும் அடித்த ஆண்டில் ஜி-20 அமைப்பின் மாநாடுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here