149 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

0
46

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தென்காசிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ரயிலில் பயணிக்க உள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு விமானம் மூலம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முதன்முறையாக தென்காசிக்கு ரயிலில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக நேற்று இரவு 8.40 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசிக்கு புறப்பட்டார். தென்காசி ரயில் நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று தென்காசிக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், நாளை மதுரைக்கு சென்ற அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here