1 நாள் ஊதியத்துடன் விடுமுறை-ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு…!

0
47

குஜராத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 27 ஆண்டுகளாக பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. டிசம்பர் மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில், டிசம்பர் 1 ஆம் தேதி182- தொகுதிகளும் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளும், டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளும் என மொத்தம் 182 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பொதுவாக தேர்தல் நடைபெறும் இடங்களில் அரசு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கும் குஜராத் மற்றும் அதனை ஒட்டியுள்ள மராட்டிய மாநிலத்தும் அரசு விடுமுறையை அளித்துள்ளது. அன்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here